பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

117



‘சரி, அப்படி என்றால் உடனே புறப்படுங்கள். என்று வேகமாக என்னைப் பயணம் செய்ய வைத்தார்கள்.

நானும் காரில் புறப்பட்டு சைதாப்பேட்டை தாண்டியதும் ‘ஓ’ வென்று வாய்விட்டுக்கதறி அழுதேன்.

டிரைவர் பயந்து போய் வண்டியைநிறுத்திவிட்டு என்ன என்னவென்று கேட்டான். அவனிடம் தந்தியைக் காட்டினேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள் அந்தத் தந்தியில் ‘என் அன்னை இறந்து விட்டாள். உடனே புறப்படு’ என்று இருந்தது.

“இதை ஏன் அப்போதே சொல்லவில்லை” என்றான் டிரைவர்.

கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் நமது துக்கத்தை வெளிக்காட்டக்கூடாதல்லவா? சரிசரி எடுகாரை என்று சொல்லி பிரயாணத்தைத் தொடங்கினேன்.