138
சொன்னால் நம்பமாட்டீர்கள்
பத்திரிக்கை நஷ்டம் ஏற்பட்டு நிறுத்தும்படி ஆகிவிட்டது. அச்சகத்துக்கு 18,000 ரூபாய் பாக்கி நின்று விட்டது. பலமுறை அவர்கள் பாக்கியை கேட்டுப் பார்த்தார்கள்.
என்னால் கொடுக்க இயலாமல் இருந்தது. அதனால் அவர்கள் என்மீது வழக்கு தாக்கல் செய்து கோர்ட் சம்மன் அனுப்பினார்கள். முதன் முதலில் நான் பெற்ற கோர்ட் சம்மன் அதுதான். அது வரையில் கடனுக்காக கோர்ட் சம்மன் பெற்றதில்லை.
அதனால் கையும் காலும் ஓடவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து என்னிடம் எப்பொழுதும் அன்பும் ஆதரவும் காட்டி வரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் சென்றேன்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சம்மனைப் பார்த்துவிட்டு ஒன்றும் கவலைப்படவேண்டாம். இப்பொழுதே ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களைப்பார்த்து இது விஷயமாகப் பேசி கோர்ட்டுக்குப் போகாமல் முடிவு செய்யலாம் என்று சொன்னார்.
சிறிதும் தாமதியாமல் கல்கி என்னை அடையாறில் உள்ள ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களின் பங்களாவிற்கு அழைத்துச் சென்றார். கல்கி அவர்கள் ராஜா சர்ரிடம் என்னைப் பற்றி மிகவும் பாராட்டிச் சொல்லி முன்னுக்கு வந்திருக்கும் ஒரு இளைஞனுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அதனால் இந்தக் கடனை நீங்கள் தள்ளுபடி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு ராஜா சர் அளித்த பதில் “கடனை வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பதுதானே முன்னேற்றத்திற்கான