பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

139


வழி. ஆகவே சீக்கிரமாகவே திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள். சிறிது காலம் வேண்டுமானால் நான் பொறுத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லி விட்டார்.

கல்கி அவர்கள் மிகக் கோபமாக எழுந்து வந்து விட்டார்கள். உடனே என்னிடம் இன்று இரவு ரயிலில் நாம் இருவரும் கோயம்புத்தூர் செல்கிறோம். இது விஷயமாக திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களைச் சந்தித்து ஆவன செய்வோம் என்று சொன்னார்.

அதன்படி மறு நாள் காலை கோவைக்கு சென்று திரு ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களைச் சந்தித்தோம்.

திரு ஆர்.கே.எஸ். அவர்கள் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள், ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் ஊட்டிக்கு என்னைக் கூட்டிச்சென்று சுமார் ஒரு மாத காலம் தன் இல்லத்தில் பல பிரமுகர்களுடன் என்னையும் இருக்கச் செய்வார். தினமும் இலக்கிய சர்ச்சைகள், கேளிக்கை, விளையாட்டுகள், பல பொழுதுபோக்கு அம்சங்கள் இவைகள் நடைபெறும்.

இதில் என்னுடைய பங்கு கணிசமான அளவு இருக்கும். எனது நகைச்சுவையை அனைவரும் ரசித்துச் சிரிப்பார்கள். இப்படி ஒரு மாதம் சிரிப்பும் கொம்மாளியுமாகக் கழியும். ஆகவே ஆர்.கே.எஸ். அவர்களுக்கு என்னிடம் ஈடுபாடு உண்டு.

என் விஷயமாகக் கல்கி அவர்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்டதும், சரி நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி நாம் அனைவரும் இன்றே சென்னைக்குப் புறப்படுவோம் என்றார் ஆர்.கே.எஸ்.

அதன்படி மறுநாள் காலை சென்னைக்கு வந்து சேர்ந்தோம். சென்னைக்கு வந்ததும் திரு. ஆர்.கே.எஸ். கல்கியைப்