பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

சொன்னால் நம்பமாட்டீர்கள்


பார்த்து நீங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டு என்னைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் உடனடியாக டெலிபோனில் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களைத் தன் வீட்டிற்கு வரும்படி சொன்னார்.

ராஜா சர் அவர்களும் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் தனிமையில் பேசினார்கள். சிறிது நேரத்தில் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அதன் பின்னர் திரு.ஆர்.கே.எஸ். என்னைக் கூப்பிட்டு ரூ.18,000 பாக்கி இருப்பதாக முத்தையா சொல்லுகிறார். உங்களால் ரூ.6,000ந்தான் கொடுக்க முடியும் என்று நான்சொல்லி விட்டேன்.

அவர் “சரி” என்று சொல்லி ஒப்புக் கொண்டு விட்டார்.

11 மணிக்கு பணம் கொண்டு வந்து கொடுப்பீர்கள் என்று சொல்லிவிட்டேன். அதனால் சரியாக 11 மணிக்கு, பணத்தைக் கொண்டு போய் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார்.

நான் சரி என்று... கொஞ்சம்... இழுத்துபடி சொன்னேன். எனது முகபாவத்தையும் என் பதிலில் உள்ள வழ வழ கொழ கொழ தன்மையையும் பார்த்த ஆர்.கே.எஸ். அவர்கள் உன் கையில் பணம் இல்லையா என்று கேட்டார்.

தற்சமயம் கைவசம் பணம் இல்லை என்றேன்.

அடடே அப்படியா சமாசாரம்.... சரி நான் 11 மணிக்கு நீ பணம் கொண்டு வந்து கொடுப்பாய் என்று சொல்லி இருக்கிறேன்.