பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

141


அதனால் சொன்ன வார்த்தைப் படி நடந்து கொள்ள வேண்டும். செக் எழுதித் தருகிறேன்.

அதை மாற்றிப் பணத்தைக் கொடுத்து ரசீது பெற்றுக்கொள் என்று சொல்லி செக் எழுதி கொடுத்தார்.

எனக்கு என்ன சொல்வது என்று தோன்றவில்லை. திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் சொல்லியபடி செக்கை மாற்றி பணத்தைக் கொண்டு போய் கட்டிரசீதைப் பெற்றுக் கொண்டு நேராக கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் சென்றேன்.

அவரிடம் சென்று நடந்த விஷயங்களைச் சொன்னதும், சேச்சே அவாள்டே போய் பணம் வாங்கி விட்டீர்களே அவர்களெல்லாம் நமக்கு எதிர் கட்சிக்காரர்கள் அல்லவா? நாளை ஏதாவது ஒரு விஷயத்தில் சொல்லிக் காட்டுவார்கள். அதனால் அந்தப் பணத்தை உடனே திருப்பிக் கொடுத்து விடவேண்டும், என்று சொன்னார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், வீட்டினுள் சென்று ரூ.6,000 கொண்டு வந்து என்னிடம் கொடுத்து. உடனே இதைக் கொண்டு போய் ஆர்.கே.எஸ். அவர்களிடம் கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்.

அவர் சொல்லியபடி பணத்தை திரு.ஆர்.கே.எஸ். அவர்களிடம் அன்று மாலையே திருப்பிக் கொடுத்து விட்டேன். அதன் பின்னர் சிறுகச்சிறுக அந்தப் பணத்தை கல்கி அவர்களிடம் திருப்பிக் கொடுத்தேன்.