பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கம்பராமாயணப் பதிப்பு

சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் என்னிடம் ரொம்பப் பிரியம் உள்ளவர்கள். என்னை ஊட்டிக்குக் கூட்டிக் கொண்டு போய் சுமார் ஒரு மாதகாலம் தன் விருந்தாளியாக வைத்துக் கொண்டார். தினமும் அங்கு பல அறிஞர்கள் வருவார்கள்.

உரையாடல்கள் நடைபெறும். ஒருநாள் திரு.ஆர்.கே.எஸ், கூடியிருந்தவர்களை “தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றிருக்கிறேன். நல்ல யோசனைகள் இருந்தால் கூறலாம்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான யோசனைகளைச் சொன்னார்கள். அவைகள் திரு.ஆர்.கே.எஸ். அவர்களைக் கவரவில்லை. என் முறை வந்ததும், “உன் யோசனை என்ன?” என்றார்கள்.

“இரண்டு காரியங்கள் செய்யலாம். ஒன்று கம்ப ராமாயணம். இதுவரை நல்ல முறையில் அச்சிடப்படவில்லை. அதை அண்ணாமலை சர்வ கலாசாலை மூலம் சிறந்த தமிழ் அறிஞர்கள் குழுவொன்று ஏற்படுத்தி, அச்சுப் பிழை இல்லாமல் வெளியிடலாம்.”

மற்றொன்று, நாகர்கோவிலில் இருக்கும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் உடல் நலமில்லாமலிருக்கிறார். அவர் எங்கும் பிரயாணம் செய்ய முடியாது. தமிழகம் இன்னும் அவருக்குத் தகுந்த முறையில் மரியாதை