கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் எனது நெருங்கிய நண்பர். எனது நகைச்சுவைப் பேச்சுகள் அவரை மிகவும் கவர்ந்திருந்தன. பல ஊர்களுக்கு அவரும் நானும் பிரயாணம் செய்திருக்கிறோம். பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறோம்.
மகாத்மா காந்தியடிகள் அமரரானபோது சென்னை தியாகராய நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயத்தில் 30 நாட்கள் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. 30வது நாள் கலைவாணரும் நானும் பேசுவதாக ஏற்பாடு.
மேற்படிகூட்டத்தில் பேசுவதற்காக இருவரும் ஒரே காரில் சென்றோம். அப்போது என்.எஸ்.கே. சொன்னார். இன்று நான் பேசிய பிறகு நீங்கள் பேச வேண்டும், முடியுமா? என்றார். ‘முடியும்’ என்றேன்.
‘நான் பேசிவிட்டால் கூட்டம் இருக்காதே ‘ என்றார். ‘கூட்டத்தை இருக்கும்படிச் செய்யலாம்’ என்றேன். ‘தோல்வி அடைவீர்கள்’ என்றார். பார்க்கலாம் என்றேன்.
‘நான்பேசிய பிறகு கூட்டத்தை நிறுத்தி வைத்து அரைமணி நேரம் நீங்கள் பேசினால் ரூ.1000/- தருகிறேன் என்றார்.
‘ரூபாய் ரெடியாக இருக்கட்டும்’ என்றேன்.