பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திராவிடக் கழகத்தினர் கலாட்டா

1947-ல், நமது நாட்டுக்குச் சுதந்திரம் வந்தது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் மந்திரிசபை நடந்தாலும் காங்கிரஸ் கட்சி கலகலத்திருந்தது. திராவிடக் கழகம் பலம் பெற்று கொண்டிருந்தது. காங்கிரஸ் தொண்டர்கள் தெருவில் நடந்தால் திராவிடக் கழகத்தவர் அவர்களை நையாண்டி செய்வார்கள். வீண்வம்பிழுப்பார்கள். “ஆறு அவுன்ஸ்” என்றும் “ஐந்து ஏக்கர்” என்று கேலி செய்வார்கள். காங்கிரஸ் கூட்டங்களை நடத்தவிடாமல் திராவிடக் கழகத்தினர் கலாட்டா செய்வார்கள்.

இம்மாதிரி செய்யும் திராவிடக் கழகத்தினரைத் தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் போய் விட்டதனால் அந்தத் தம்பிகள் சண்டப்பிரசண்டம் செய்து கொண்டிருந்தார்கள். போலீசாரும் ஏன் என்று கேட்கவில்லை. காங்கிரஸ் அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நானும் என்னைப் போனற சில காங்கிரஸ் பேச்சாளர்களும், திரு.ம.பொ.சி. அவர்களும்தான் ஆங்காங்கே நடக்கும் காங்கிரஸ் கூட்டங்களில் திராவிடக் கழகத்தைத் தாக்கிப் பேசுவோம். நான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசுவேன். அதனால் திராவிடக் கழகத்தினர் என் மீது ரொம்பவும் காட்டமாக இருந்தனர்.

ஒரு நாள் சென்னை மயிலாப்பூரில் ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, குளக்கரையிலுள்ள பஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். என் பின்னே சிறு