பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

சொன்னால் நம்பமாட்டீர்கள்


கேட்டாராம். அதற்கு ராஜாஜி “சமூகத்தின் நன்மைக்காகச் செய்யப்படுவதுதான் சட்டம்.

சமூகத்தின் நன்மைக்காக நாம் எதைச் செய்தாலும் அது சட்டந்தான். உங்களுக்குள்ள அதிகாரத்தை வைத்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் ஒருவாரத்தில் இம்மாதிரிப் பத்திரிகைகள் ஒன்று கூட நம் தமிழ் நாட்டில் இருக்கக்கூடாது” என்று கண்டிப்பான உத்தரவு போட்டாராம்.

உடனே போலீஸ் கமிஷனர் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் உத்தரவு போட்டு கடைகளில் உள்ள மஞ்சள் பத்திரிகைகளை பறிமுதல் செய்யும்படியும் இனிமேல் இம்மாதிரி பத்திரிகைகள் விற்றால் கைது செய்வோம் என்று மிரட்டியும் இரண்டே நாட்களில் ஒரு மஞ்சள் பத்திரிகைகள் கூட இல்லாமல் செய்துவிட்டார்.

பின்பு ஒவ்வொரு அச்சகத்திற்கும் போலீஸார் நேரடியாகச் சென்று மஞ்சள் பத்திரிகைகள் அச்சடித்தால் அச்சகங்களை மூடும்படிசெய்வோம் என்று எச்சரிக்கை செய்ததையொட்டி எந்த மஞ்சள் பத்திரிகையும் தமிழ்நாட்டில் அச்சாகாமல் அவ்வளவும் நின்றுவிட்டன.

ஆனால் இந்துநேசன் பத்திரிகை மட்டும் பெங்களூரில் இருந்து அச்சாகித் திருட்டுத்தனமாக தமிழ்நாட்டுக்கு விற்பனைக்கு வந்தது. அதையும் போலீஸார் தடுத்து நிறுத்தி எந்தவிதமான மஞ்சள் பத்திரிகையையும் தமிழ் நாட்டில் தலைகாட்டாதபடி செய்துவிட்டார்கள்.

அதன் பின்னர் பல முக்கிய பிரமுகர்கள் மஞ்சள் பத்திரிகைகளை ஒழித்தது குறித்து போலீஸ் கமிஷனர் திரு.பார்த்தசாரதி ஐயங்கார் அவர்களைப் பாராட்டிய போது அவர் கூறிய பதில் அவ்வளவு பாராட்டுதலுக்கும் உரியவர் சின்ன அண்ணாமலைதான் என்பதாகும்.