பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

205



”ஐயாவுக்கு முன்னாலே நான் என்ன பேச முடியும்?” என்றேன்.

”ஏன் என்னைத் தாக்கிப் பேகங்கள். நான் கோப்ப் படமாட்டேன். ரசிப்பேன்” என்றார்.

“சரி, சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்,” என்று கூறிவிட்டு அன்புடன் விடைபெற்றுக் கொண்டேன்.

அடுத்த ஒரு மாதத்தில் ”பெரியார் பிறந்த தினவிழா பொதுக்கூட்டம் ஒன்றில் பேச அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டு அதன் பிறகு கொஞ்சம் குழப்பமடைந்தேன். பெரியாரை நேரில் வைத்துக் கொண்டு அவரையே எப்படித் தாக்குவது? என்ற யோசனையில் ஆழ்ந்தேன். எனினும் கூட்டத்திற்குப் பெரிய விளம்பரம் செய்து விட்டார்கள். ‘வந்தது வரட்டும்’ என்று கூட்டத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

கூட்டடத்திற்கு வந்திருந்த மக்களில் பெரும்பாலோர் பெரியார் பக்தர்கள். பலர் கறுப்புச் சட்டை வேறு போட்டு பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

எதிரில் உட்கார்ந்திருந்த சிலருடைய மீசை அச்சத்தைக் கொடுத்தது. இத்தனைக்கும் மத்தியில் இருட்டில் பூரண சந்திரன் போல பெரியார் ஒரு பறங்கிப் பழமாகக் காட்சியளித்தார்.

அன்புடன் என்னை அவரும் அவர் அருமையாக வளர்க்கும் நாய்க்குட்டியும் வரவேற்றார்கள். பலர் பெரியாரைப் புகழ்ந்து பேசினார்கள். கூட்டம் ஒரே உற்சாகமாக இருந்தது. என் முறை வந்ததும் நான் எழுந்தேன். என்னைக் கண்டதும் சபையில் ஒரு கலகலப்பு ஏற்பட்டது. பேச ஆரம்பித்தேன்.