212
சொன்னால் நம்பமாட்டீர்கள்
என் நண்பரின் காதலி வீட்டில் ஒரு சமையல் ஆள் உண்டு. அவளுக்கு நண்பர் நிறையச் செய்திருக்கிறார். அவள் மார்க்கட்டுக்குப் போகும் நேரம் நண்பருக்குத் தெரியும். மார்க்கெட்டுக்கு அருகில் நானும் நண்பரும் காத்திருந்தோம். சமையல்காரி வந்தாள். அவளிடம் ரூ.100 கொடுத்தோம்.
நைசாகப் பேசி அன்று அதிகாரி வந்தபோது நகையை எங்கே ஒளித்து வைத்திருந்தார்கள் என்ற விஷத்தையும் தெரிந்து கொண்டேம். சமையல்காரியும் நாங்களும் சந்தித்ததையாரிடமும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்து கொண்டோம்.
மறுநாள் போலீஸ் கமிஷனரைச் சந்தித்தேன். தயவு செய்து இன்று மீண்டும் அந்த வீட்டைச் சோதனை செய்யும்படி உத்தரவிட வேண்டும் அதிகாரியுடன் நானும் செல்ல அனுமதி வேண்டும். என்றேன். கமிஷனர் அவர்கள் அருள் கூர்ந்து அப்படியே செய்தார்கள்.
அதிகாரியும் நானும் மேற்படி பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். எங்கள் இருவருக்கும் பலத்த உபசாரம் நடந்தது. அதிகாரி பல இடங்களில் தேடினார் நானும் கூடவே இருந்தேன். பெண்களும் ஆர்வத்துடன் பீரோ, மேஜை.பெட்டி எல்லாவற்றையும் திறந்து காட்டினார்கள். -
ஒரு இடத்திலும் நகை இல்லை. அதிகாரி என்னைப் பார்த்தார். நான், “சரி சமையற் கட்டில் தேடலாம்” என்று கூறிச் சட்டென்று சமையல் அறைக்குள் நுழைந்தேன். அங்குள்ள டப்பாக்கள், பெட்டிகள் எல்லாவற்றையும் அதிகாரி சோதனை செய்தார். ஒன்றும் கிடைக்கவில்லை.
“இனி என்ன செய்வது?” என்றார் அதிகாரி.