பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருடாதே

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ராஜா ராணி கதைகளில் நடித்து புகழ் பெற்றுக்கொண்டிருந்த சமயம்,

அவர் நடித்துக்கொண்டிருந்த சக்ரவர்த்தி திருமகள் என்ற திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.

சக்ரவர்த்தித் திருமகள் ஒரு ராஜா ராணி கதைதான்.

திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்தான் அதில் கதாநாயகன். திருமதி அஞ்சலிதேவி கதாநாயகி.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்-மதுரம் அதில் நடித்தார்கள்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுடன் எனக்கு முன்னமேயே நல்ல பழக்கம் உண்டு.

திரு. எம்.ஜி.ஆர். அவர்களுடன் நான் நெருங்கிப் பழகியது சக்ரவர்த்தித் திருமகள் படப்பிடிப்பின் போதுதான்.

படப்பிடிப்பின் இடைவேளையில் அரசியலைப் பற்றி சலிக்காமல் விவாதம் செய்வார். படப்பிடிப்புக் காலங்களில் தினமும் நாங்கள் ஒன்றாகவே சாப்பிடுவோம். அதனால் எம்.ஜி.ஆருடன் மிக நெருங்கிப் பழகவும்-மனம் விட்டுப் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், “நீங்கள் ஏன் ராஜா- ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?” என்று கேட்டேன்.