பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டி.கே.சண்முகம் அடைந்த
பேரின்பம்

1960 -ல் “கடவுளின் குழந்தை” என்ற திரைப்படம் எடுத்தேன். அதில் சிவஞான பாரதி என்ற ஒரு தமிழ் ஆசிரியர் வேடம். தமிழை மூச்சாகக் கொண்டு தமிழ் பரப்பிவரும் கதாபாத்திரம். “தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாடலைப் பாடும் சிறந்த வேடம்.

அந்த வேடத்தை யாருக்குக் கொடுப்பது என்று யோசித்தேன். அப்போது தமிழரசுக் கழகத்தில் என்னுடன் மிகவும் ஈடுபாடு கொண்டு தமிழ்த்தொண்டு செய்து கொண்டிருந்த முத்தமிழ் கலாவித்வரத்ன அவ்வை டி.கே.சண்முகம் அவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.

இதை திரு. சண்முக அண்ணாச்சி அவர்களிடம் நான் சொன்னபோது மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்.

“நடிப்பதற்குப் பணம் எவ்வளவு வேண்டும்” என்று கேட்டேன். “படம் முடிந்ததும் பணம் கொடுக்கலாம்” என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு படத்திற்குப் பல யோசனைகள் சொன்னார். கூடவே இருந்து நடித்துப் படத்தை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தார். படம் முடிந்து வெளி வந்தது. படத்திற்கு நல்ல பேரும் கிடைத்தது.

சொ.ந-15