சின்ன அண்ணாமலை
239
கடிதத்தின் மூலம் ரொம்ப அன்யோன்யமாகி விட்டோம். “ஓயிர் ஈருடல் என்றெல்லாம் பிணைந்துவிட்டோம். தீபாவளி வந்ததும். கருப்பையா மூலம் ஒரு பட்டுப் புடவை பரிசளித்தேன். பின்னர் அவள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு கைக் கடிகாரம் வாங்க ரூபாய் முன்னூறு அனுப்பி வைத்தேன். அதற்காக அவள் முன்னூறு முத்தங்களை கடிதம் மூலம் அனுப்பி வைத்தாள்.
பின்னர் தங்க வளையல் வேண்டுமென்றாள் அதற்கு இருநூறு ரூபாய் அனுப்பி வைத்தேன்.
இப்படியாகக் கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது.
பின்னர் நான் மதுரையில் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலையாகி வெளியே வந்து கருப்பையாவை விசாரித்தேன்.
பால்கார கருப்பையா ஏதோ திருட்டுக் கேசில் பிடிபட்டு ஜெயிலுக்குப் போய்விட்டான் என்று தெரிந்தது.
ஒருநாள் தேவகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்க்கப் போனேன்.
சப்-இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்ததும், வாங்க வாங்க, “உங்கள் காதல் கடிதங்கள் வெகு ஜோர்” என்றார்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“எந்த காதல் கடிதம்?” என்றேன்.
“நீங்கள் மெய்யம்மைக்கு எழுதிய காதல் கடிதங்கள்தான்” என்றார்.