பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

சொன்னால் நம்பமாட்டீர்கள்



“அதெப்படி உங்களிடம் கிடைத்தது?” என்றேன்,

“பால்கார கருப்பையா திருட்டுக் கேசில் அகப்பட்டுக் கொண்டான். அவன் வீட்டில் சோதனை போட்டபோது நீங்கள் எழுதிய காதல் கடிதங்கள் கிடைத்தன. இதைப்பற்றி கருப்பையாவிடம் விசாரித்தபோது உங்களிடம் பொய் நாடகம் ஆடி, மெய்யம்மை என்ற பெண் எழுதுவதுபோல உங்களுக்கு கடிதம் எழுதி ஏமாற்றியிருக்கிறான்” மட்டைக்கு இரண்டு கீற்று என்று சப்-இன்ஸ்பெக்டர் புட்டுப்புட்டு வைத்தார்.

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என்ன செய்வது? ஏமாந்தது ஏமாந்ததுதானே?

ஆனால் சப் இன்ஸ்பெக்டர் சொன்னார்.” சார், நீங்கள் பெரிய எழுத்தாளர். காதல் கடிதங்கள் எழுதுவதில் மன்னன்.”

ஏமாந்த வேதனையுடன் எழுந்தேன். நாமும் ஒரு எழுத்தாளரானோம் என்ற திருப்தியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.