பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சொன்னால் நம்பமாட்டீர்கள்


கண்டேன். சுற்றி நின்ற மக்கள் பயந்து செத்துக் கொண்டிருந்தார்கள். உறவினர்கள் என் வாயை மூடும்படி சைகை காட்டினார்கள்.

இதற்குள் இன்ஸ்பெக்டர் அங்கு வந்து விட்டார். ஏட்டய்யாவிற்கே அந்தப் பயம் என்றால், இன்ஸ்பெக்டர் வந்தால் கேட்கவா வேண்டும்? அந்தக் காலத்து இன்ஸ்பெக்டர் சரிகை டர்பன் வைத்திருப்பார். அட்டகாசத்தின் மறுபெயர் இன்ஸ்பெக்டர் எனலாம்.

இன்ஸ்பெக்டரைக் கண்டதும் ஏட்டய்யா நாய்க்குட்டி போலக் குழைந்தார். இன்ஸ்பெக்டர் மிடுக்காக, ஏட்டய்யா வையும் என்னையும் சேர்த்து மரியாதை யாக என்னடா சொல்றான்? என்றார்.

“144 உத்தரவைக் கேட்கிறான்” என்றார் ஏட்டு

“கேட்டால் கொடுக்க வேண்டியதைக் கொடு” என்றார் இன்ஸ்பெக்டர்.

ஏட்டய்யா “உத்தரவை"க் கொடுத்தார் என்றா நினைக் கிறீர்கள்?

பெஞ்சிமேலே ஏறி என் பிடரியில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். எதிர்பாராத இந்த அடியால் பெஞ்சிலிருந்து தரையில் குப்புற விழுந்தேன்.

உடனே அங்கு நின்ற நாலைந்து போலீஸ்காரர்களும், “ஐயோ பெரிய இடத்துப் பையன் கீழே விழுந்து விட்டானே” என்று துக்கி விட்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்கள் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் போலவும் நினைத்து என்னை காலால் உதைத்துத் தூக்கிவிட்டார்கள்.