பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

சொன்னால் நம்பமாட்டீர்கள்



இது காங்கிரஸ் விஷயம் இல்லையே; தமிழ் சம்பந்தப்பட்டதுதானே. தமிழுக்காகச் செல்ல்லாமே என்றொல்லாம் நியாயங்களை எடுத்துரைத்து, எங்களை ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அவர்களிடம் கூட்டிச் சென்றார்.

ராஜா சர் அவர்கள் எங்கள் இருவரையும் வெகு அன்பாக வரவேற்று, எங்கள் தோள்மேல் கைபோட்டு மாநாட்டைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டார். நாங்கள் நிதி வேண்டுமென்று கேட்க வில்லை. ஏனோ கேட்பதற்கு எங்கள் மனம் துணியவில்லை.

காபி சாப்பிட்டதும் நாங்கள் போய் வருகிறோம் என்று கிளம்பினோம். ராஜா சர் எங்களிடம் ஒரு கவரைக் கொடுத்து “இதில் எனது அன்பளிப்பு இருக்கிறது மாநாட்டைச் சிறப்பாக நடத்துங்கள்” என்று சொன்னார்கள். விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.

கவரைப் பிரித்துப் பார்த்தோம். அப்படியே திகைத்துக் கல்லாய் சமைந்து நின்றோம்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் அதில் இருந்தது ரூபாய் பத்தாயிரம்.