தமிழிசை இயக்கம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். தேவகோட்டையில் ஒரு கல்யாண வீட்டில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வெகு நேரம் அரியக்குடி தெலுங்கிலே பாடிக் கொண்டிருந்தார். நான் தமிழிசை இயக்கத்தின் காரியதரிசி. ஆகவே அரியக் குடியிடம், “தயவு செய்து தமிழில் பாடவும்,” என்று சீட்டு எழுதிக் கொடுத்தேன்.
அரியக்குடி சீட்டை வாங்கிப் பார்த்து விட்டுப் புன்முறுவல் பூத்தார். பாடுவதாகச் சைகை செய்தார். நான் வெற்றிப் பெருமிதத்துடன் அவர் பாடப்போகும் தமிழ்ப்பாட்டை எதிர்பார்த்திருந்தேன். பாட ஆரம்பித்தார் அரியக்குடி அதுவும் என்னைப் பார்த்தே பாட ஆரம்பித்தார்.
“யாரடா குரங்கு நீ-இங்கே வந்த
யாரடா குரங்கு நீ”
அருணாசலக் கவிராயர் கீர்த்தனைதான். நான் அரியக்குடியை முறைத்துப் பார்த்தேன். இதுதமிழ் பாட்டுதானே? என்று சொல்லிவிட்டு அதைப் பாடி முடித்தார்.
அந்தப் பாட்டு முடிந்ததும் என்னை அருகில் வரும்படி அரியக்குடி கூப்பிட்டார். சென்றேன். கோபப்படாதீர்கள் சும்மா தமாஷ் செய்தேன். இனி பூராவும் தமிழ்ப் பாட்டுத்தான் என்று