பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சொன்னால் நம்பமாட்டீர்கள்



உடனே மக்கள் கொதித்தெழுந்து நாற்புறமிருந்து கற்களை வீசத் தொடங்கினர். நான் மைக் முன்வந்து, “மகாத்மா காந்தி மீது ஆணை, யாரும் போலீசாரைத் தாக்கக் கூடாது” என்றேன்.

கூட்டத்தினர் சிறிது அடங்கினர். அச்சமயம் பார்த்து இன்ஸ்பெக்டர் வீராசாமி பின்வாங்கி, தன் ஜவான்களுடன் வண்டியில் ஏறி ஓடிவிட்டார், மக்கள் வண்டியை விரட்டிக் கொண்டே சென்றார்கள்.

அக்காட்சி எனக்கு மக்கள் வெள்ளைக்காரன் ஆட்சியை விரட்டிக் கொண்டு ஓடுவதுபோல் தோன்றியது.