பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

சொன்னால் நம்பமாட்டீர்கள்


அப்புத்தகத்தை மிகஅழகாகப் போட்டுக் கொடுத்தவர் சக்தி வை. கோவிந்தன் அவர்கள்.

அதன்மேல் அட்டையை கண் கவரும் வண்ணம் அச்சடித்துக் கொடுத்தவர் திரு. சத்ருக்கனன் அவர்கள்.

தமிழ்ப்பண்ணை எழுத்தாளர்களுக்கும், தேச பக்தர்களுக்கும் நிழல் கொடுத்து வந்தது. தமிழ்ப்பண்ணையின் மூலம் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க முடிந்தது.

‘நாமக்கல் கவிஞருக்குப் பண முடிப்பு அளிக்க முடிந்தது. அதைப் பார்த்த திரு. சி. என். அண்ணாதுரை அவர்கள் என்னை நேரில் வந்து பாராட்டி விட்டு, தானும் பாரதிதாசனுக்கு அப்படி ஒரு நிதி அளிக்க வேண்டும். அதற்கும் கூடவே இருந்து உதவ வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பலமுறை திரு. அண்ணாதுரை அவர்கள் சார்பில், திரு. என். வி. நடராஜன் என்னைப் பலமுறை வந்து சந்தித்து பாரதிதாசன் நிதி அளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள்.

ராஜாஜியின் நூல்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி, வ.ரா., டி. எஸ். சொக்கலிங்கம், பொ. திருகூடசுந்தரம் பிள்ளை, நாடோடி, தி.ஜ.ர. இப்படி ஏராளமானவர்களின் நூல்களை வெளியிட்டு, பெரிய விழாக்கள் நடத்தி எழுத்தாளர்களுக்குக் கெளரவம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியது தமிழ்ப் பண்ணையே!

ஆண்டுதோறும் பாரதிவிழா, பாரதி பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டிநடத்தப்பட்டன. திரு.வி.க. மணிவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது தமிழ்ப் பண்ணையே காந்தியடிகளின் ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் நடத்தியதும் தமிழ்ப் பண்ணையே!