பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68

காதல் கனிந்த காரிகையர்கட்கு; உன் வரவு சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரிப் பொழிந்ததைப் போன்றதாகி விடுகிறது.

தேன் வெறி பிடித்த வண்டுகள் அப்போது எழில் மலர்களை முத்தமிடுகின்றன.

சிரிக்கும் பொழுது பற்களை பீறிக் கிளம்பும் வெண்மை நிற ஒளியொத்தக் குருக்கத்திப் பூ மலர்ந்து மணம் பெறுகிறது.

பண்தேரே! காதல் என்ற மன்னன் உன்னைக் கண்ணுற்ற பின்தான் கன்னிப் பெண்களை வேட்டைய்ாடப் புறப்படுவ தாக தமிழ் இலக்கியங்களிலே படித்திருக்கிறேன் நான்.

வெண்ணிலா உனது குடை வசந்தம் அமைச்சன் ! உன் புகழேற்றும் இசைவாணர்கள் குயில்களாமே!

பலாச மலர்கள் உனது வில்லா? வட்டமிட்டொலிக்கும் வண்டினங்கள் நாணு மாந்தளிர்கள் அம்புகளா உனக்கு?

ஆகா! உன் பெருமையை எப்படிச் சாற்றுவேன் இளங்காற்றே!

தென்னலே! காதல் மன்னன் உன்னைக் குஞ்சரமாக ஊர்ந்து பவனி வருகிருளுமே!

சபாஷ் யானையின் பலம் உனக்குண்டோ: அப்போது உன் மதிப்பு உரைக்கவொணுததன்ருே.

தென்றலே! நீ பிறந்த இடத்தை விட்டு வருகிற போது மலர்க்காடுகளைக் காண்கிருய்?

காவைக் கண்டிருப்பாய்! கன்னல்-செந்நெல் காடுகளையும் பார்த்திருப்பாய்!

அல்லி உனக் கண்டு சிரிக்குமாம்! தாமரை தலை திமிருமாம்; சுய மரியாதை வீரர்களைப் போல ரோஜா ஆல