பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 38

எடுப்பதால்! அரியமா நீ; கீழ் அடிவானத்திலிருந்து மேல் வானத்திற்கு ஒடுகின்ற குதிரை மனித இனத்தின் தந்தை நீ" நீ உதயன்; ஜீவனின் உற்பத்தி, நீ ஞாயிறு சிலப்பதிகார ஆசிரியர் உன்னைப் போற்றினர்! எல்லை நீ அண்டத்தின் வரை கோடு! கிரணமாவி; நீ; கிரணத்தை ஆக்குபவன் ஏழ்பரி யோன்; எழுகின்ற காரணத்தால் வேந்தன்; உலகை நீ ஆளுவதால் விருச்சிகன், சுடரவிழ்க்கும் தலைவனைதால் விண்மினி உயிர்களுக்கே நீ கண்மணி! அருக்கன்; வாழ்க்கைச் சுடரை உலகிற்கும் பெருக்குவதால்!

அப்படியாளுல் நான் யார்? எங்கோ முளைத்தவனே! எதற்கோ வந்தவனுே? நானே அதை அறிய முடியவில்லை! பரிதி வட்டமே! என்னை உனக்காக்கிக் கொள்ள வேண்டும். இழந்த எனது உரிமைகளை மீண்டும் எனக்கு வழங்க, உனது கதிர்காமத்தில் திட்டம் தீட்டுவாயா! சாம்பல் நிற மேகங் களுக்கு இடையில், உனது சாம்ராச்சிய அழகைப்பைத்தியம் பிடித்த மின்னல்கள்-இந்த பூமியை நேர்க் குத்தலாகச் கிழிக்கும்போது, என் தமிழ் நெஞ்சத்தை இந்தி மொழி தாக்குவதைப் போல் இருக்கிறது! தொட்டிலிலே எனது தாய் தாலாட்டுப் பாடிய பாட்டுகள், நீ அறிந்த மட்டில் தமிழ்தான் என்பது தெரிந்ததல்லவா? வரையறுக்கப் பட்ட தமிழ் பண்பாட்டில் விளையாடுகின்ற என் மூச்சைக்குறைநாளுக்கு என்னை இரையாக்க வேண்டாம். வேதத்தின் ஒளிக்குக் கட்டுபடாத என் மனமும்கூட, தமிழ் நாதத்தில் துவண்டுபோனதை நீ அறிந்திருப்பாய்!

என் விரோதிகளின் கூர்மையானவாள்,எனது தசைகளைக் கிழித்திருக்கின்றன! ஆனால், அதே வாட்கள் என் தமிழைத் துளைபோட முடியாமல் தாகத்தால் தவித்தவனைப் போலத் தவித்திருப்பதை நான் கண்டேன். நரகத்தின் வளைகுடாவான பஞ்சத்தில், எனது வாழ்க்கைத் தெப்பம் சுழலால் பாதிக்கப் படுகின்ற நேரத்தில் எனது கண்கள், தமிழென்ற நம்பிக்கை நட்சத்திரத்தை அன்றி, வேறு எதையும் காணவில்லை என்பதும் உனக்குத் தெரியும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/129&oldid=564573" இலிருந்து மீள்விக்கப்பட்டது