பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

அப்போதெல்லாம் நான் உனது கிரணங்களால் ஒளி கண்டு நல்ல இடத்தை நாடியே வந்திருக்கிறேன். எனது ஆசையும்.காதலும் உனது பலிபீடத்தின் மீது துவங்கிய தாகும் என் குழந்தைகளின் எதிர்காலத்தையும்-எனது இறுதி காலத்தையும்-நான் அந்த பலி பீடத்தின் மீதே, வைத்துத் துவக்கின்றேன். உனது கதிர் வட்டத்தால் என்னே எந்த உருவமாக்கினலும்-அந்த உருவத்தை அடைகின்ற பக்குவப்பட்ட களிமண் நான்!

எனது பண்பாட்டையும் நாகரிகத்தையும் ஆயிரம் ஆண்டுகளாகத் தன்மை மாரு திருக்கும் உனது பாதத்திலே வைக்கிறேன். எனது எண்ணங்கள் அத்தனையும் உன்னிடத் திலேதான் துவங்குகின்றன. கொஞ்சமும் தாமதமின்றி: அவை உன்னைப் பின் தொடர்கின்றன! எனது பகற்கனவு களும் இராக் கனவுகளும்.நீ கொளுக்திய ஆயிரம் விளக்கு களால் ஆனவை. மயத்தில் நீ தலைநிமிர்ந்து நிற்கும்போது: என்னுடைய கரம் உன்னே நோக்கி வளர்கின்றது! அந்தியிலே நீ சாயும்போது, எனது வீரம் அதே பணிவோடு உன் காலடி யிலே வீழ்கிறது: மாலை நேரத்தில் வீடுகளில் கொளுத்துகின்ற ஒரு சாண் திரியொளிக்கு, வாய்ப்பளித்துவிட்டு, நீ பதுங்கு கின்ற தன்மையைப் பார்த்தால் உனது பெருந்தன்மை எனக்குப் புரிகின்றது. என்னுடைய இளமைக் காலம் முழுவதும் பகலாக இருக்குமானல்...

அலையின் மீது மத்தளம் தட்டும் உனது கரங்கள்-புயற். காற்றின் குடுமியைப் பிடித்து உலுக்குகின்றபோது-வீரம் விளங்குகின்ற உனது வியன் மிகு அரசியலே நான் பரிந்து கொள்ள முடிகின்றது. பருவ காலங்களில் நீ மலையின் கம் அருவியின் தோள்மீதும்-மலரின் உதட்டின் மீதும்தும்பியின் இறக்கைகள்மீதும்-கேட்பாரற்றுத் கிடக்கும் காளான்கள்மீதும்-செந்தூர வண்ணங்கொண்டு நீ படரும் போது-எங்கோ முளைத்திருக்கின்ற எனக்கு விடுதலை கிடைத்ததைப்போல உணருகிறேன். பாலைவனத்திலே காய்கின்ற உனக்குப் பொழிலுக்கு இடையில் வேலை என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/130&oldid=564574" இலிருந்து மீள்விக்கப்பட்டது