பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

சூரியனே நீ மாட்டிய விலங்காக இருந்தாலும் சரி, அது உரிமையின் வடிவமாக இருந்தால் உடைக்காமல் நான் பாது காப்பேன். மொழி ஆதிக்கத்தின் வடிவமாக அது புலப்பட் டால் சூரியனுக்குக் கீழே நான் பொடி பொடியாக்குவேன். என்னுடைய மொழி உணர்ச்சி கரைகின்ற கனவுகள் அல்ல

உன்னே வெறுத்த இராக்கால மலர்கள்கூட ஒளிந்திருந்து உனது அழகைப் பாதிக்கின்றன. இறந்துபோன தியாகிகளும் எல்லையற்ற பகைவர்களும் உன்னுடைய ஒளிக்கற்றையால் தான் உயிர் வாழ்கிரு.ர்கள்; உனது அற்புதமான முக வெட்டை-புகழ் ஒளியை-பூட்டை உடைத்து வெளியே வருகின்ற அறிவு ஒளியை-சில நொண்டு குதிரைகள் பார்த்துக் கனத்தன. சில கழுதைகள் பார்த்து கத்தினஅவைகளை, நீ உன் பொன்னுன கரங்களால் பொன்னுேவிய மாக் மாற்றிவிட்டாய். அதாவது எதிரிகளை எதிரிலே உட்காரவைத்து நொடியிலே நண்பளுக்கிவிட்டாய். தத்துவம் ஆமியில் புறப்பட்டு வானத்தில் முடிவாகிறது. வானத்தில் முடிவான தத்துவம் வையத்தை நோக்கி மறுபடியும் வரும் போது அது ஏறிவரும் தேர் நீதான்!

உன்னை எள்ளி நகையாடுகிறவர்களை நீ கிள்ளி எறிந்து விடுவதில்லை-மாருக கிள்ளி சூட்டிக் கொள்கிருய். உடம்பிலே வலுவில்லாதவன் நீ தருகின்ற வெப்பத்தை எண்ணி திட்டுகிருன். மனதிலே சுத்தமில்லாதவன் பயப் படுகிருன். ஆளுல் ஒளியும்-வலிவும் உன்னல் தான் வருகிறது. என்பதை பிறகே உணருகிறேன். உலகம், நீ வாசிக்கும் யாழொலியை கேட்க ஆரம்பிக்கிறது. நீ காட்டும் அற்புத மான உதாரண உருவங்களைக் கண்டு ரசிக்கிறது. ஆளுல் எதிரிகள் தன் கண்களை இறுக மூடிக் கொண்டு வசை மாரி பொழிகிருர்கள், அவர்கள் துரக்கமில்லாத குரங்குகள் அவர்கள் கைகள் இழிவானவை.

அவர்கள் புருவம் ஒரு முட்டாளின் புருவம். அவர்கள் வாய் பாம்பு முட்டையிடுவதுபோல் தீயவைகளையே முட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/133&oldid=564577" இலிருந்து மீள்விக்கப்பட்டது