பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷委莎

அதன் விரிவில் யாரும் குடித்தனம் செய்யவில்லை. அதனுடைய செறிவில் யாரும் அணுவாகவில்லை. ஆனல் அதன் ஒளிமட்டும் ஊருக்குப் பரவுகிறது. அதன் வட்ட வடிவில் அறிவின் சிதறல்கள். அதன் மவுனத்தில் ஞானத்தின் தெளிவு. தன்னிடத்திலே இருக்கின்ற பெரிய சக்தியினல் அந்த நிலா கர்வமடைவதில்லை,

தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி அது நெடுநேரம் பேசுவதில்லை.

அது இழுக்கின்ற பிராணவாயுவில் மக்களின் சக்தி இருக்கிறது.

புதிதாகப் பிறந்த குழந்தை முதல், பழையதாகப் போகின்ற மனிதன் வரை அதன் பெருமைக்கு சாட்சியாக இருக்கிருர்கள்.

ஏற்றத்தாழ்வென்ற படிக்கட்டுகளிலே ஏறி அது சரிந்து கீழே விழுந்ததில்லை.

அந்த நிலவைக் கோபப் படுத்திப் பார்த்தாலும் அது கொதிக்கின்ற சூரியனுவதில்லை.

பூமியில் இருக்கின்ற சில அராஜக எரிமலைகள் அதன்மீது தீக்குழம்புகளை வாரி இறைத்தபோதுகூட நிலா சூட்டினல் வெடிப்பு விடுவதில்லை.

பொருமையின் எல்லைக் கோட்டில் அந்த நிலா நின்று கொண்டு அடக்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்து கொண்டிருக்கின்றது.

கருமுதல் கல்லறை வரையில் துன்பத்தால் அமர்ந்து கொண்டிருக்கின்ற மனித சமுதாயம், நிலவை நம்பியே தன்னுடைய வாழ்நாளேத் துவங்குகின்றது.

வீசியடித்த புயல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப் புயலுக்குப் பெயர் மக்கள் எழுச்சி-அந்த எழுச்சிக்குக் கர்த்தா அறிஞர் அண்ணு என்ற வெண்ணிலா.

e = s $, so - - *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/141&oldid=564585" இலிருந்து மீள்விக்கப்பட்டது