பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£5 1

தாயே ஆடி மாதம் ஒரு நாள்: உன்னுடைய பிறந்த நாள் வந்தது:

அப்போது உன் அழகைப் பார்க்கப் பொன்னிப் பெருக் கெடுத்து வரும்போது நானும் வந்தேன்.

கோவலனையும்-மாதவியையும் வெட்டிப் பிரித்த சில மஞ்சள் பூக்கள் வரலாற்றிலே செய்த வஞ்சத்தை மறைத்துக் கொண்டு, அதே காவிரியில் மிதந்து சென்றன:

இந்த யூக்கள் சிலப்பதிகார இசை நாடகத்தால் கெட்ட பெயர் பெற்ற பூக்கள் அல்ல.

அம்மா! உன் பிறந்த நாளுக்காகச் சூடப்பட்ட தார் மாலையிலிருந்து உதிர்ந்து விழுந்தவை.

நீ, குஞ்சரத்தின் மீதேறி வந்தாய், உன்னைப் பார்த்து கை எடுக்காதவன் முடவன்தான். உன் அழகைப் பார்க் காதவன் குருடன்தான்!

கரிய மேகத்திற்குக் காலும் வாலும் வைத்தால், நீ ஏறி வந்த கரியயானபோல் இருக்கும்.

அந்த மேகங்கள் அப்போது ஒன்றும்கூட இல்லாத காரணத்தால்-வானம் மணப் பெண்ணுக்காக விரிக்கப்பட்ட பாயைப் போல இருந்தது.

உன் அழகை அங்கே வந்து பார்க்கலாம் என்று ஒடோடி வந்தேன். அதற்காக நட்டாற்றைவிட்டு கரைக்கே வந்தேன். என் தாயின் அழகில் இந்த உலகம் பூந்தாதிலே மயங்கிக் கிடக்கும் வண்டுகளைப் போல, மயங்கிக் கிடப்பதைக் கண்டேன்.

அந்த காட்சியைக் கண்ணுரக் கண்ட நான் ஒரு கணம் மெய் மறந்தேன்:

உன் தமிழ்ப்பற்றை மட்டும் அப்போது ஒருவன் பாட்டாகப் பாடினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/152&oldid=564596" இலிருந்து மீள்விக்கப்பட்டது