பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莖節

இறந்தது பிழைப்பதில்லை என்று தெரிந்த பிறகு, கண்கள் அழுகின்ற புத்தியை விடுவதில்லை.

மனித குணங்கள் சூழ்நிலையில் சாகும்போது அண்ணு அழுதார்.

பாசத்திற்கும் அவருக்குமுள்ள பந்தம்-பாலுக்கும் அதன் வெள்ளைக்கும் உள்ள தொடர்பாகும்-அவ்வளவு நெருக்கம்.

கூடு கட்டத் தெரியாத குயிலுக்கு காக்கையின் கூடு வாழ்விடத்தைத் தருகிறது.

நாடு ஆக்கத் தெரியாத தமிழனுக்கு அண்ணுவின் நாக்கு தென்னம் நரம்புகளைத் தேடித் தேடித் தந்தது.

அண்ணு இதயம்வானம் விரிவதற்கு முன்பே விரிந்திருக்க வேண்டும்.

ஏனென்ருல், கொதிக்கும் கனவியையும்,

குளிரும் புனலியையும்,

உதிரும் விண்மீனையும்,

ஒழுகும் மேகத்தையும்,

சீறும் மின்னலையும்,

கீறும் இடியையும் தாங்கி,

எதையும் தாங்கும் இதயத்தை, அவர் பெற்றிருந்தது அதல்ைதானே!

ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் தெரியுமா? பழம் விழுந்தவுடன் பிஞ்சு பூரிப்பதுபோல, சிலர் அண்ணு வீழ்ந்தவுடன் பூரிக்க ஆரம்பித்தார்கள்.

பாவம் அவர்கள்: எந்தக் காம்பிலே இருந்து அண்ணு விழுந்தாரோ அந்தக் காம்பிலே இருந்து அவர்களால் முளைக்க முடியவில்லை!

காலம் ஒன்றுதான் எந்தக் காம்பிலே முளைக்கிறதோ அந்தக் காம்பிலே இதுவரை முனைத்துக் கொண்டிருப்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/16&oldid=564460" இலிருந்து மீள்விக்கப்பட்டது