பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器

நீர்வீழ்ச்சிக்கு நடுவிலே புகுந்தாலென்ன என்று கேட்டது குஞ்சு.

  • மரணம் உன்னை விழுங்கும் என்றது தாய்,

அண்ணுவின் பேச்சு வீழ்ச்சிக்கு நடுவில் புகுந்தவர்கள் மரணம்பட்ட வாய்போல மூடிக்கிடந்தார்கள்,

நீர்வீழ்ச்சியின் தண்ணீரை என் அலகில் கொஞ்சம் தானே எடுக்க முடிகிறது என்றது குஞ்சு.

. அதையே உன்னல் ஜீரணம் செய்ய முடியுமா என்றது. 应厅山。

மொத்தத்தையும் குடித்தால்தான் ஜீரணம் செய்த தாகப் பொருளா?

கொஞ்சம் குடித்தால் போதாதா என்றது குஞ்சு:

அண்ணுவைக் கொஞ்சம் குடித்தவன் அதிகம் குடித்தவகை நினைக்கிருன்.

அதிகம் குடிக்க நினைத்தவன் குடிக்காமலேயே வியந்து நின்ருன்.

நீர்வீழ்ச்சி எங்கே இருந்து வருகிறது அம்மா என்று குஞ்சு கேட்டது.

தெய்வத்தின் கையில் அன்பு என்ற செம்பு இருக்கிறது! அந்தச் செம்புக்குள் எட்டுக் குணங்கள் சேர்ந்த பரிமளங்கள் இருக்கின்றன.

தெய்வம் குழந்தையாக இருக்கும்போது செம்பைப் போட்டு உடைத்தது.

உள்ளே இருந்த பரிமளங்கள் வழிந்தனவே, அவைதான் நீர்வீழ்ச்சி!

அப்படியானல் அந்தத் தெய்வத்தை எங்கே காணலாம்? அன்பகத்திலும் அறிவகத்திலும் அதைப் பார்க்கலாம்.

அ- 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/26&oldid=564470" இலிருந்து மீள்விக்கப்பட்டது