பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

ஒளியிருந்த முட்டைக்குள், உருவாகி நின்ற கருவுக்குள் நித்திய தீனியாகி, நிர்மல வெளியாகி, நின்ற சக்திக்கு நீ தானே முதல்வித்து:

புரியவில்லையே கேட்டது நீர்வீழ்ச்சி! திமிர்ந்த பொருளிலெல்லாம் நீயாகி இருக்கின்ருய். நின்ற பொருளுக்கும் நீயாகி நிற்கின்ருய் நிற்காத பொருளுக்கு நீ ஆகி நிற்கின்ருய், உன்னைப் படைத்தவன் நீ! உன்னில் இருப்பவன் நீ! புரியவில்லையே! மீண்டும் நீர்வீழ்ச்சி கேட்டது. இன்னுமா புரியவில்லை! அறிவு ஒரு குளுமையான அந்தி! இரவுக்கும் பகலுக்கும் இடையிலே இருக்கின்ற குழந்தை அது!

அந்தியைப் போல, குளிர்கின்ற அறிவு நீ! ஒளியில் அந்தி: ஒன்வில் யாழ்! காற்றில் தென்றல்! ஆகாயத்தில் அண்டம்! நெருப்பில் இளஞ் சூடு: நிலத்தில் மருதம்! நீரில் நீர்வீழ்ச்சி! சந்தேகம் தீர்ந்ததா? மலை கூறி முடித்தது? அதோ நீர்வீழ்ச்சி! எல்லேயற்ற கடலை நோக்கிக் கலக்கிறது:

-త தன் உப்புக் கண்ணிரால் அதனை ஏந்திக் கோள்கிறது.

நீர்வீழ்ச்சி தொடங்கியது தெரியாமல் தவிக்கின்றேன்: அது முடிந்ததையம் தெரியாமல் முடிக்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/29&oldid=564473" இலிருந்து மீள்விக்கப்பட்டது