பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

மழைத் தோளால் நெய்யப்பட்ட பனித் திரையைக் கதிரவனுடைய கூரீட்டிகள் ஊடுருவின :

அதன் விளைவு, வானவில் வண்ணங் காட்டி மேற்கில் சிரித்தது :

போருக்குப் பின்னே எழும் அமைதி போல; வான மண்டலப் போருக்குப் பின், வில் மட்டும்தான் தனியே நின்றது !

பயங்கரக் காட்டிலே வழி தவறி வந்துவிட்ட குழந்தைஎவற்றைப் பார்த்தாலும் தனது பிஞ்சு விழிகளை உருட்டி உருட்டிப் பார்த்து மிரள்வதைப்போல், வானவில்லும் நீண்ட நெடுவானத்திலே காட்சியளித்து, உலகைக் கண்டு மிரண்டு நின்றது :

பசுமையான செடி கொடிகளையும், இதழ் விரித்த பூக் களின் அழகையும் பார்த்துச் சிரிக்கும் கள்ளங்கபடமற்ற குழவியைப் போல; வானவில்லும் உலகிலே நடைபெறும் மக்கட் கூட்டத்தின் திருவிளையாடல்களைக் கண்டு தனது வண்ணத்தைக் காட்டிச் சிரித்து நின்றது :

அந்த வில் அமைதிக்காக வளைந்ததா? மற்ருெரு அம்பைக் காற்றிலே மிதக்கவிட வளைந்ததா ?

வினுக் குறியாக வில் விளங்கியது. இருப்பினும் வானவில் வானவில்தானே !

மனிதன் மழலையினின்று வளர்ந்தவனன்ருே குழவி புத்தி வாலிபத்தில் வடிவம் காட்டுவது இயல்புதானே !

வானவில்லைக் கண்டேன் ! கைகொட்டி நகைக்கும் சிறுபிள்ளையானேன் !

எனது எண்ணங்கட்கு இறக்கைகள் முளைத்தன ! வானவில்லின் விளிம்புகளில் நின்றவாறே உலா வர ஆரம்பித்தேன் !

வில்வின் ஒருமுனை வழியாக ஏறினேன் அதன் உச்சியை அடைந்தேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/31&oldid=564475" இலிருந்து மீள்விக்கப்பட்டது