பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ7

விசும்பை அளந்தறியோம்: ஆழியை அளந்தறியோம்: அளவுக் கடங்காது அள்ளவள்ளக் குறையாது:

களவதனை எவரும் செய்யார்! இந்தக் காட்சிக்குக் கருப் பொருளாய் வந்த கரு நீலம்; ஆழத்தின் இலக்கணமாகும்:

சிரம் பழுத்த தென்னுட்டுப் பேரறிஞன் அறி வாழத்தை மரம் மட்டைகள் கணக்கிட்டு அறிந்திடுமோ!

உரமுள்ளோர் எத்தனை பேர் அவரை நெருங்கினர்: நின்றெரியும் அவரின் அறிவை உண்டு எத்தனையோ பேர் ஊர் போளுர் என்று உனக்குத் தெரியாது ?

கத்தும் கடல் குடித்தான் குறுமுனிவன்! " கன்னித் தமிழ்க் குடித்தார் இந்தப் பேரறிஞர்! குறள் படித்த இந்த மூதறிஞன் விரல், தொட்ட இட மெல்லாம் இலக்கியத்தின் விளக்கங்கள்!

அன்னேன் அறிவாழம் கண்டார் யார் ? ஆழத்தின் நிறங்கண்டார், மவுனத்தில் தான் ஆழ்ந்தார்: அன்னவரை நோக்கி ஓடி விட்ட எதிரியின் உயிரெல்லாம் மீண்டும் திரும்பாமல் மீளவழி தேருமல், பூண்ட அன்புச் சிறைக்குள்ளே பூட்டப்பட்டிருக்கும் வர லா ற் ைற க் கண்டாயா ?

இத்துணையும் அறியாத நீ-கரு நீலம் மாயை என்ருல் கை. கொட்டி நகையாதோ தரணி:

அறிவை மாயம் என்போன்.அது இலான் தம்பி, அது இலான்!

ஆழத்தின் நிறங்காட்டும் கரு நீலம் மாயமில்லை என்பதை நீ உணர்ந்து, உன்னத் தெளிவாக்கி நட, என்று கூறி முடித்தது குவளை மலர்!

莎 . ఖీ ఢీ భఢీ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/38&oldid=564482" இலிருந்து மீள்விக்கப்பட்டது