பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைங் கூழ்!

இச்சித்தப் பொருள் யாவும் எட்டிச் சென்று விட்டதால் அவற்றை மாயை என்கிருன் மானிடன்!

பச்சைப் பைங்கூழ்கள் பார்த்த பின் கூட, இச்சரக்கை எப்படித் தான் நீ அவிழ்த்தாய்? இவ்வாறு விஞ வெழுப்பிக் கிண்டல் குறும்பவிழ்த்து நகைத்தது நல்கூழ்!

இக்கரைக்கு அக்கரைப் பச்சையென்று அறிவு திக்கற்ற மூளையெல்லாம் இயம்பிற்று.

அதைக் கேட்டு விட்டு, பச்சை நிறம் அழியும் என்கின்ற பசப்பு வார்த்தையினுல், இச்செகத்தை ஏய்ப்பவர்கள் இருக் கின்றனர்:

அஃதே போல் நீயும் நினைத்து விட்டாயோ தம்பி!

கடலிலே காய கல்பமுண்டு. கருமேகம் பெருநிலத்தால் காதலித்துப் பொழிகின்ற காதல் மழை பருவமழை!

மேகத்திற்கும் பூபாகத்திற்கும் ஏற்பட்ட திருமணத்தின் பயணுகக் கழனி கருவுற்ருள்.

நாற்றுத் தவழ்ந்தது! நெல்லாய் வளர்ந்தது பச்சை நிறத்தோடு, பாயும் தென்றலுடன், கை கொட் டிச் சிரிப்பதைக் கண்டான் ஏராளன்:

அன்னைத் தமிழ் திலத்தில்- அழகுப் பழனத்தில்-ஆடும் நெற் கதிர்களைப் பார்:

அவை அணிந்துள்ள ஆடை வண்ணத்தின் நிறம் பச்சை! நெஞ்சிலே கை வைத்துச் சிந்தித்துப்பார்! வருடம் முழுவதும் வியர்வையைப் பிழிந்து விட்டு. களை பிடுங்கி, கண் விழித்துக் காத்துக் கழனியெல்லாம் பச்சை நிறங் கொண்டு, பரிணமிப்ப தொன்ருலே, அதை மாயை என்று சொல்வது அறிவாமோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/39&oldid=564483" இலிருந்து மீள்விக்கப்பட்டது