பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

அறிவுறுத்தக் காட்டுகின்ற நிறம் கூட பச்சையல்லவா என்றது?

அதுமட்டுமா? கற்களிலே மிகச் சிறந்த கல்லெனக் கூறு வது எது ?

மண்ணகம் வாழ்த்துவது-மக்களெலாம் போற்றுவதுஎது ?

மரகதப் பச்சையன்ருே! அது பற்றிய விளக்கத்தைக் மேலும் கூறட்டுமா? கேள்!

  • 条 兹 ९

மாதவி!

குறிஞ்சிப் பாட்டெனும் இலக்கியத்தில் பெரும்

புலவர் கபிலர் 'பைங்குருக்கத்தி என்ற ஓர் கொடியைக் குறிப்பிட்டார்.

அக் குருக்கத்தி ஒரு கொடி! அழகு தவழ நெடிது நீண்டு வளரும்:

பற்றுக் கொம்பின்றி அது தானே பற்றிப் படராத பான்மையது!

வேறு கோல் கொண்டு பந்தரிட்டு அதன் மேல் குருக்கத் தியை ஊன்றி ஆறு காட்ட வேண்டும்.

அப்போது தான் அது நன்கு வளரும் படரும்! தப்பாது தழைக்கும்:

இக்கொடி படரும் பந்தருக்கு 'அக்காலத்தில் மாதவி பந்தர் என்ற பெயருமுண்டு:

மாதவிக் கொடியின் நிறம் கண்ணைக்கவரும் நல்ல பச்சை திறமுடையது தம்பி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/41&oldid=564485" இலிருந்து மீள்விக்கப்பட்டது