பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

இன்னல், இடர்பட்டு இருந்த பொருள் இழந்தனர் மக்கள்.

கன்னல் வாழ்க்கையிலே கசப்பைத்தான் கண்டனர். மின்னல் வாழ்வென உன்னைப்போல, மக்களும் நினைத்து எண்ணிக் கிடந்தனர்: ந்ைந்தனர் வாழ வழியின்றி !

அந்நிலை அகற்றிட மங்கல தொணி எழுப்பி மஞ்சள் கொடி காட்டிஞர் ஒருவர்.

  • பொங்கிடும் இன்பம் எங்கும் தங்குக என்று சங்கே முழங்கு என்று சாற்றினர்.

விழி பெற்றனர் மக்கள் அவர் தம் அறிவுரைகளைக் கேட்டு.

வழிபற்றி நடந்தனர். நல்ல சமயமடா இதை நழுவ விடுவாயோ !” என்று !

குழிவிழுந்த கன்னத்தில் சிரிப்புக் குமிழுடைத்து சிரிக்கத் தொடங்கின்ர் மக்கள்.

வாழ்க்கை சிரித்தது. மனிதன் சிரித்தான். தமிழகம் சிரித்தது. தலைநிமிர்ந்து நடந்தது. தன்மானம் பெற்றது.

இத்துணைக்கும் காரணமாய் இருக்கும் மஞ்சளினை மாயை யெனப் புகன்ருயே சிறுவனே!

மறுமுறையும் இவ்வாறு ஆய்ந்துரைக்காதே என்று மங்கலமாய் கூறியது மஞ்சள் சாமந்தி மலர்!

சாமந்தி மலர் இவ்வாறு சாற்றிய உரை கேட்டேன். .ெ த ரி வ ைட ந் த நான் சிறிது தூரத்திற்கப்பால் சென்றேன்.

மற்ருெரு மலர் விடுவேனே மாயை மனிதனே உன்னை என்றது.

மீண்டும் மாயைப் பற்றிய மயக்கமா என்று மிரண்டேன்.

எனது பெயர் என்ன தெரியுமா மனிதா ? என்றது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/48&oldid=564492" இலிருந்து மீள்விக்கப்பட்டது