பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்றை நாடியிருந்தால் நான் உனக்கு அறிமுகப் :படுத்தப்பட்டிருப்பேனே !

கன்னித் தமிழ் இலக்கியப் புலவர்கள், வேங்கை மரத்தைப் பற்றிப் பெருமையாகப் பாடியிருக்கின்றனர்.

நான் எங்கே விளைகிறேன் தெரியுமா ? அது ஒரு பெரிய வரலாற்றுக்குரிய இடமாகும்.

ம லை க் குன்றுகளின் சரிவுகளிலேயுள்ள கற்களைக் காட்டாறுகள் கூழாங்கற்களாய் கரைத்து வருவதைக் கண்டிருப்பாயே.

அந்த ஆறுகள் அடவிகளின் இடுக்கிலே வளைந்து வளைந்து பாம்புகளைப் போல சீறிப் பாய்ந்து வரும்.

பலவகை மர இனங்களை அவ்வாறுகள் சந்திக்கும் ! அவற்றின் மணங்களோடு அவை ஒடி வரும்.

சந்தன மர த் தி ன் மணவாழ்வைக் கூடத் தன் தண்தோளிலே பல்லக்கெனச் சுமந்துவரும்.

அந்த ஆறுகளுக்கு முகத்துவாரமெனும் சாவுகள் உண்டு.

அதையும் துச்சமென மதித்து மரணத்தை மஞ்சமாக ஏற்று காற்றைவிடக் கடுகி வரும்.

அவை ஏன் அவ்வாறு ஓங்காரமிட்டும் ஒசையற்றும் ஓடி ஆடி-பாடியும்-அன்னமென வருகின்றன.

கதிர்களின் ஆணவ ஊடுருவல்கட்கு அடிமையாகி விட்ட பூமியைக் குளுமைப் படுத்த வருகின்றன.

வெப்பமெனும் பகையை விரட்டுகிறேன் பார் என்று, வானமெனும் அடலேறு மழையாக முழக்கமிடுகிருன்.

அந்த வான் முழக்கத்தை ஏற்று, மலைச்சரிவுகளிலே கூடுகின்றன.

கானகம் என்ற பகுதிகளிலே அவை பரந்து விரிந்து நதியாக உருப் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/50&oldid=564494" இலிருந்து மீள்விக்கப்பட்டது