பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}

ஆணவக் குரல் கொடுத்து, பூமியில் அண்டும் கதிர்ப் பகைவனுக்குள் எரியும் உயிர் விளக்கை ஊதியணைப்பவை இந்த ஆறுகள்தான்.

பொங்கும் வளத்தை அங்கே வலிவுபடுத்திட அவை பொலிவோடு பாய்கின்றன.

அந்த அடவியிலே, மலைச்சரிவுகளிலே தான் வேங்கைமரம் விளைகின்றன தம்பி என்றது. வேங்கைப் பூ.

அடேயப்பா, மரத்தின் கதையே இவ்வளவு சிறப்புப் பெற்றதா ? மயக்கமாக இருக்கிறது. பூவே உன் வரலாறு.

அடடே இதற்குள்ளாகவா மயக்கமடித்து விழப் பார்க் கிருய் ? இன்னும் கேள்.

அந்தக் காடுகளிலே, மலைச் சரிவுகளிலே எத்தனையோ எழிலான மர வகைகள் விளைகின்றன.

அவைகட் கெல்லாம் என் போன்ற அருமையோ பெருமையோ ஏற்பட்டு விடுமா ?

வெல்ல நினைத்து வேடிக்கைக் காட்டுகின்ற கழுகுக் கூட்டத்தின் கண்டத்தைக் கத்தரித்தால் எப்படியிருக்கும்?

இதுபோல எண்ணற்ற எழில்மரங்களிடையே நான்தான் மிகமிக உயரமாக-மிகமிகப் பருமளுகக் காட்சியளிப்பேன்.

எல்லா மரங்களையும் வென்று வெற்றிக்கொடியை நாட்டி விண்முட்ட விளங்கி நிற்பேன்.

எந்த மரமும் எனக்கு நிகராக இருக்க முடியாது. ஏன் ? என் பெயர் வேங்கை மரமல்லவா ? வேங்கை என்ருல் சாமான்யமான மிருகமா ?

வீரத்தின் விளக்கமல்லவா நான் ? அதனால் நான் தோற்றத்திலேயே மற்ற மரங்களை வீழ்த்துவேன்.

என்னருகே உள்ள மரங்களெல்லாம் கண்டம் கத்தரிக்கப் பட்ட கழுகுகளைப் போலக் காட்சியளிக்கும்.

எனக்கு மட்டுமேன் அந்தச் சிறப்பு ? பெருமை! வீரம்: தோற்றம்: பண்பு :