பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೯೯೯ நாயகம்!

{;

உயிர் அடங்கிய உடற்போல சவக்களைத் தட்டிய முகத்தோடு இரவு உலகத்தின் மேல் மொய்த் துக் கொண்டிருந்தது.

இருளில் ஒடிக் கொண்டிருக்கும் ஆற்றின் மீது அடிவானம் தோய்ந்து கொண்டிருந்தது.

அடிவானத்தின் விளிம்பெல் லாம் தூக்கத்தில் சிரிக்கின்ற குழந்தையின் புன்முறுவலைப் போல்.ஊமை மின்னல்கள் இங்கு மங்கும் ஓடிக்கொண்டிருந்தன.

செறிந்த தென்னங் கீற்றின் வழியாகத் தென்றலின் பவனி வருகிற பொழுதெல்லாம் கீற்று கள் சந்தம்பாடின!

அந்தி சாய்கிற வரையில் கவலை யேற்றத்தின் வாயிலாக கழனிக்கு நீர்ப்பாய்ச்சிய உழவர் சென்று விட்டபிறகு-ஏற்ற வாய்க்காவில் இருந்து கழனிக்கு ஓடிவரும் தேங் கிய நீர் சிறிய மடிப்பலைகளோடு அங்கங்கு சிலிர்த்துக் கொண் டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/70&oldid=564514" இலிருந்து மீள்விக்கப்பட்டது