பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இல்லையெனில், கடல் பொங்குவதைப்போல்-பக்கத்திலே

• • 5 _్య గ్రీ ... جبه جل جلالهې , % : - ( o உள்ள நீர்வீழ்ச்சியின் தேக்கம் அலேகரம் நீட்டுமா

திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவில் சந்தனத் தென்றல் நுழையும்போது-தொழுநோய்ப் பிடிததவன தன்னுடைய வேதனையை மறந்து-அந்தத் தென்றலின் குளுமையையும் ரசிக்கிருன்:

அதுபோல, இழுக்கு அழுக்கால், இன்னல் துன்ப த்தால் வழக்காய் வாடிக்கொண்டிருக்கும் இந்த வியனுலகம் ஆனந்தக் கூத்தாடுவதைக் கண்டேன்!

அந்த கிராம மக்களது கூச்சல் இப்போது சிறிது அடங்கியது:

நாடகம் முடிந்த அரங்கமும்-ஆட்டம் முடிந்த இடுகாடும் அமைதியைத்தான் வைத்துக்கொண்டிருக்கும்!

பறவை மலேயின் உச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது: பறப்பன.ஊர்வன எல்லாம் இப்போது தலை தூக்கிப் பார்த்தன!

பூமியிலிருக்கும் 96 தாதுப் பொருட்களும்.உயிரினங்கள் அனைத்தும் பூரித்து வெளியில் வந்தன!

இப்போது பறவை உச்சியின் மீது தத்துவம் கூறும் ஞானியைப்போல மிக அமைதியாக அமர்ந்து கொண் டிருந்தது:

தன்னுடைய அலகால் இறகுக்கிடையில் இருக்கின்ற

தினவைப் போக்கிக் கொண்டது!

சிலிர்த்த இறகுகளை மேல் நோக்கி நிறுத்தி ஜீவகாற்ருல் தன் களைப்பைப் போக்கிக் கொண்டது.

கிராமத்து மக்கள் ஓடிவந்தார்கள். தன்னந்தனியணுய்

தானும் அமைதியாய் நின்று கொண்டிருக்கும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/77&oldid=564521" இலிருந்து மீள்விக்கப்பட்டது