பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


சிதறல் எழுந்தது. ‘ அது சரி. உன் மணவாளர்கூட நாடக ரசிகராமே ? என்று வினு விடுத்தாள்.

 ‘'’

“ அப்படியானுல், அவரையே உன்னுடைய ஜோடி பாக்கிக் கொண்டு விடலாம் என்று சொல். நீங்கள் இரண்டு பேரும் நடிக்க வேண்டிய கட்டங்களுக்கு உங்கள் வீட்டிலேயே ஒத்திகை வைத்துக் கொள்ளுங் களேன் :

போ, மஹறி !’ சிரிப்பின் சன்ன நெளிகள் பின்னிக் கலந்தன. மஹேஸ்வரிக்குக் காப்பி கொடுத்து வழியனுப்பி வைக்க வந்தாள் தோழி. அவள் காரின் கதவைத் திறந்து கொண்டு டிரைவர் ஆசனத்தில் அமர்ந்த போது, அவள் பார்வையுடன் தமிழ்ச்சித்தனின் பார்வை மோதியது. இரு தரப்பிலும் ஒர் அதிசயம் கடந்தது. இதழ்களுக்குப் பதிலாகக் கைகள் பேசிக் கொண்டன. கார் புறப்பட்டுச் சென்றது.

தங்கசாலையை அடைந்தாள் மஹேஸ்வரி. பங்களா அவளை அடைந்தது. வெயில் அரித்துக் கொண்டிருக் தது ; வெறித்துக் கொண்டிருந்தது.

“ வாம்மா, வா !” ஒரே அழைப்பில் இரண்டு, மூன்று சுருதிகள் பேசின.

கூடத்திற்கு வந்தாள் மஹேஸ்வரி. பந்தி வைக்கப் பட்டிருந்தது. அவளேயும் உட்காரச் சொன்னர்கள். உட்கார்ந்தாள். சாப்பிடச் சொன்னர்கள். சாப்பிட்டாள். அங்கயற்கண் அம்மாள்தான் பரிமாறினுள். அவள் மனம் மகிழ்வில்ை உப்பியிருந்தது. ஐந்தொகையைத் தயாரிக்கும் கணக்கன் கூட்டிக் கழித்து மண்டையை