இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66
நெற்றிமேட்டில் கரம்புகள் முட்டிப் புடைத்தன. மூண்ட சினத்தைத் தட்டி அணைத்தது அவளது கெஞ்சத் துணிச்சல்.
டயல் பண்ணப்பட்டது.
காளத்திநாதனின் குரல் கேட்டது. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவளைக் காண்பதாகப் பதில் கிடைத்தது. -
மஹேஸ்வரிக்குப் பாதங்கள் தரையில் பாவவில்லை. சற்றுமுன் சாதித்து முடித்த சாதனையை எண்ணினுள். பெருமை பிடி கொடுக்கவில்லை. ரவிக்கைக்குள்ளிருந்து பளபளப்புத் தாள் ஒன்றை கலியாமல் எடுத்தாள். அது திருமண மடல். கிறை பெருக்குக்கு நிகராகச் சிரிப் பைச் சிந்தின்ை. ஊர் காக்கும் மஹேஸ்வரியா அவள்?
இதோ, அழைப்பு :
மணமகன்: காளத்திநாதன்.
மணமகள்: மஹேஸ்வரி.