பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


எங்கே போகவேண்டும்?” போலீஸ் ஸ்டேஷனுக்கு !...” * என்ன, போலீஸ் ஸ்டேஷனுக்கா p;3

ஆமாம்!”

போய்...??

மற்றவை வெள்ளித்திரையில்...!” புயல் உருவெடுத்தது கார். புயல் உருவெடுத்தது ஆண்மனம், இளக்தென்றல் இதமுற அணைந்தது.

அது ஒரு பெரிய பங்களா. ககர்ப்பகுதிக்கு அமைக் கப்பட்ட ஓர் எல்லேக் கல்லேப் போல இருந்தது. நீல விதானச் சித்திரப்படுதாவிற்குஅமைக்கப்பட்டநெற்றிக் கண்ணைப்போல விளங்கிய நிலவுக் கண் அந்தப் பெரு மனைக்குக் காவல் இருந்தது. காய்கள் உஷார் ‘ என்ற அபாய அறிவிப்புப் பலகைக்குக் காவலாக அமைந்தது அந்த இராஜபாளையம். ஜம் மென்று கண் வளர்ந்து கொண்டிருந்தது அது. -

காரிலிருந்து இறங்கிய மஹேஸ்வரி, ஸார் ! என்று குரல் கொடுத்தாள். ஸார் வரவில்லை. பச்சைப் பசுங் கிளி கடந்து வந்தது. ‘’ வா மஹறி!” என்று வரவேற்புப் பத்திரத்தை பத்திரமாகப் படித்து, அந்த அளவில், அளவாக கிம்மதி பெற்று, உற்ற தோழியின் தோளைப் பற்றிப் பிடித்தவாறு உள்ளே கடந்தாள். படிகள் எண்ணிக்கையை வரிசைக் கிரமமாகச் சொல்லிக் கொண்டன. - -

வணக்கம் ஐயா!” என்றாள் மஹேஸ்வரி. 6