பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


லிலும் பசுமை மிகுந்த சம்பவங்கள் மென்காற்றாக உரு வம் கொள்ளும். இது இயற்கை

வேதநாயகம் யமதர்ம ராஜனின் காட்டை அடையப் பெறுவதற்கு முக்தி, டி. எஸ். எம். தனபாலுக்கு உற்ற தோழராக ஆகும் பெருவாய்ப்பு உண்டானது. சட்டப் புத்தகத்தை கைகாவலுக்கு எடுத்துச் சென்ற அவர், அன்பின் சரித்திரத்தைக் கொண்டுவந்த கதை ஆயிற்றே அது? -

தஞ்சாவூரில் மானம்புச் சாவடியில் அப்பொழுது வேதகாயகம் தொழில் கடத்தி வந்தார். ஷராப் கடை. கள்ளக் கடத்தல் சம்பந்தப்பட்ட தங்கக் கட்டிகள் சில வற்றை மூன்றாம் பேருக்குத் தெரியாமல் வாங்கி வைத் திருப்பதாக அரசாங்கத்துக்குத் துப்பு கிடைத்தது. ஆங்கிலேயர்கள் சட்டப் புத்தகத்தைத் தலைக்கு வைத் துப் படுத்து உறங்குபவர்கள் அல்லவா ? கிடைத்த தகவலுக்கு கண் மூக்கு உண்டா என்பதைப் படித் தறிய தனபால் வந்தார். உங்கள் பேரில் கான் சந்தேகப் படுகிறேன், என்று எடுத்த எடுப்பிலேயே து.ாக்கியெறிந்து பேசினர் அதிகாரி. - வேதகாயகம், தெய்வத் திருச்சபையை தம் சிந்தை தனில் கொணர்ந்து சிரித்தார். அந்தக் கள்ளமில்லாச் சிரிப்பின் எதிரொலிகேட்டு, அவருடைய ரகசிய அறைகள் அத்தனையும் கதவுகளைத் திறந்து விட்டன. திருமறைக் காட்டில் கதவக் திருக்காப்புக் கொள்ள’ திருஞான சம்பந்த மூர்த்தி காயனரும், கதவினைத் திறந்தருள் செய்யுமாறு திருநாவுக்கரசு காயருைம் பாட வில்லையா ?

போலீஸ் அதிகாரி உள்ளே சென்று சோதனை போட்டார். சத்திய சோதனையாகவே அந்நிகழ்ச்சி