இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“மிகவும் நன்றி. நீ மிக மிக நல்லவன். நான் உன்னைக் கேலி செய்ததற்கு மன்னித்து விடு. நாம் நண்பர்களாக இருப்போம்” என்றது ஆடு.
“சரி வா; எங்களுடன் விளையாடலாம். நீ ஆட்டை ஏற்றிச் சென்றாயே, அதேபோல் எனக்கும் ஒரு சவாரி கொடு” என்றது முயல்.
“வா” என்று மகிழ்ச்சியுடன் அழைத்தது சோனா.
அன்றிலிருந்து அவைகள் யாவும் நல்ல நண்பர்களாகி விட்டன.