பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

சேக்கிழார்குடி

தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களுள் புலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்த திரு ஆம் ஊர் குன்றத்தூர். இக்குன்றத்தூரில் குடியேறிய வேளாளர்களில் கூடல்கிழான், புரிசைகிழான், வெண்குளப்பாக் கிழான், குளத்துழான், சேக்கிழான் என்ற பல முதன்மைக் குடிமக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அறிவு, ஒழுக்கம், சீலம், வாய்மை முதலிய நற்பண்புகள் உடையராய்ச் சிவபக்தியில் சிறந்து வாழ்ந்தனர்.

அருண் மொழித் தேவர்

அன்னோருள் சேக்கிழார் குடியில் வெள்ளியங் கிரியார் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியார் அழகாம்பிகை எனப் பெற்றர். “எங்கள் பாக்கியப் பயனால்“ இவர்களுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு அருண் மொழித் தேவர் எனப் பெயர் சூட்டப்பட்டது. அருண்மொழித் தேவன் என்பது சோழ அரசர்களுள் முதலாம் இராசராச சோழனுடைய பெயர்; இராசராசனும் சிவபக்தியில் சிறந்தவன். சிறந்த சிவபக்தியுடைய வெள்ளியங் கிரியாரும் தம் அருமை மைந்தற்குப் பண்டு வாழ்ந்த சோழ அரசனது பெயரையே இட்டார். அந்நாளில் அருண் மொழித்தேவர் என்ற பெயர் பலரும் பூண்டிருந்ததாகவும் தெரியவருகிறது. எனவே இப்பெயர் சேக்கிழாருக்குப் பெற்றாேரிட்ட பெயராகவும் கொள்ளலாம். இனி இப்பெயரைக் காரணப் பெயராகக் கொள்ளினும் அமையும். சேக்கிழார் பாடிய நூலாகிய பெரிய புராணம் திரு அருள் வாய் மொழி ஆகும். ஆகவே இவருக்கு அருள் மொழித்தேவரென்ற பெயர் வந்ததெனவும் கொள்ளலாம்.