பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

சேக்கிழார்

இனி இவருக்குச் சேக்கிழார் என்ற பெயரே எல்லோராலும் அறியப் பெற்ற தொன்று. சேக்கிழார் என்பது இவர் பிறந்த குடிப்பெயர். அக்குடிப் பெயராலேயே இவருக்குப் பெயரமைந்தது.

அமைச்சரானமை

கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்தவராகச் சேக்கிழார் வாழ்ந்து வருங்கால் சோழவரசனாகிய அநபாய சோழன், “ஞாலம், மலை, கடல் இவற்றினும் பெரியன யாவை?“ என்று ஒரு வினா விடுத்தனன். புலமை சான்ற பலரும் விடை பகரகிற்றிலர். இதனை அருண் மொழித் தேவர் அறிந்து சோழனது வினாவுக்கு விடையாகக்,

“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது“
“நிலையில் திரியா(து) அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது“
“பயன்றூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”

என்னும் மூன்று குறட்பாக்களை எழுதி அரசனுக்கு ஓலை விடுத்தார். அரசன் மனமகிழ்ந்து, சேக்கிழாரைத் தனது அவைக்கு வரச் செய்து, அவரை அமைச்சராக ஆக்கி, உத்தம சோழப் பல்லவன் என்னும் பட்டமும் அளித்தனன். இச்செய்தியைச் சபாபதி நாவலர் அவர்கள் இயற்றிய சிதம்பர சபாநாத புராணத்திலே அமைத்துள்ள சேக்கிழார் தோத்திரப் பாடலினின்றறியலாம்:

“ஞாலமலை கடல்தன்னில் பெரிய தெ(து)
எனஎடுத்து ஞால மாள் செங்