பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


முடிப்புரை

இத்தலைவன் உத்தமசோழன் காலத்தில் குவளாலத்தினின்று வந்திருந்தனன் என்றதிலிருந்து ஒரு அரசியல் செய்தி ஊகித்து அறியப்பெறுகின்றது; உத்தமசோழன் காலத்தில் கங்கநாடு வரையில் சோழர் ஆட்சி பரவியிருந்தது என்பதே அச்செய்தியாகும். இங்ஙனம் குவளாலத்திலிருந்து, சோணாட்டுக்கு வந்து, தேவாரம் பெற்ற தலத்தில் வதிந்து, சிவத்தொண்டுகள் பல புரிந்து, அந்நாள் சைவர் நெஞ்சுள் அமர்ந்து, இந்நாளில் ஆய்வாளர் சிந்தைக்கு விருந்தாய் விளங்கும் அம்பலவன் பழுவூர்நக்கனின் பெயரும் பீடும் நீடுவாழ்க! (இவ்வூர்க் கல்லெழுத்துக்களுட் சிலவற்றைத் தமிழ்ப்பொழில் துணர் 7, பக்கம் 296-301ல் காண்க).