பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தோடு வலம்வருவர். அப்பொழுது இசைக்கருவிகளை வாசிப்பர். ஸ்ரீபலி என்பது, ஹவிர்பலி எனவும் தீயெறி சோறு எனவும் கூறப்பெறும். இதற்கு நிபந்தம் விட்டதாகப் பார்த்திவேந்திரனது 5-ஆவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்துச் செப்புகிறது.[1] ஸ்ரீமந் நீலகங்கரையன் அண்ணாவன் நாட்டடிகளுக்குத் தாயனூர் ஊரார் விண்ணப்பித்தனர். சூரியகிரகண நாளில் ஸ்ரீபலிபோகம் தரப்பெற்றது. ஸ்ரீபலிக்கு ஐந்துபேர் தணக்கமலை மகா தேவர் திருமுன் வாச்சியங்கள் முழக்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. இதற்குரிய நிலம் 1 (வேலி). இந்த 1 (வேலி) நிலமும் உம்பளநாட்டு மேற்குடிகிழான் திரன் மூதையனும் இவன் தம்பி திரன் உலகடிகளும் பொன்கொடுத்து இறையிழிச்சி, ஸ்ரீபலி போகமாகக் கொடுத்தனர்.

உத்திரமேரூரில் ஸ்ரீ பலிபோகமாக நிலம் அளித்த செய்தி இரண்டு கல்லெழுத்துக்களில்[2] கூறப்பெற்றுள்ளது.

அன்றியும் ஸ்ரீ பலிக்கும் அர்ச்சனாபோகத்துக்குமாக உடையார் தேவியார்[3] வில்லவன் மஹாதேவியார் 2920 குழிநிலம் உத்தரமேரூரில் அளித்தார். சிரத்தாமந்தர்[4] இவ்வறத்தை நன்கு நடைபெறக் கண்காணித்தல்


  1. 362 of 19O9 ; S. I. I. III 178.
  2. 55 of 1898: S. I. I. III 171; and 20 of 1898: S. I. I. III 182.
  3. பார்த்திவேந்திர பன்மனது மனைவி.
  4. சிரத்தாமந்தர் - கோயில் தருமங்களைச் சிரத்தையோடு (பற்றாேடு) பார்ப்பவர்.