பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

ஏற்றுக்கொண்டதும் தேவார மூவருடைய படிவங்களைத் தஞ்சை இராசராசேச்சுரத்தில் எழுந்தருளுவித்து அவற்றுக்கு அணிகலன்களும் அளித்தான் என்பதை இரண்டு கல்லெழுத்துக்களினின்றும் அறியலாம்[1].

விளக்கம் வருமாறு:—

1. நம்பி ஆரூரர்-சுந்தரமூர்த்தி சுவாமிகள் படிவம்

பாதாதி கேசாந்தம் பதினெழுவிரல் இரண்டு தோரை[2] உயரமும் இரண்டு திருக்கையும் உடையவராய்க் கனமாக[3] எழுந்தருளுவிக்கப்பெற்றது; இது செப்புப் பிரதிமம்; இவர் நின்ற பத்மம் இரு விரலரை உயரமுடையது; இதனோடுங்கூடச் செய்த பீடம் எண் விரல் சம சதுரத்து மூவிரலே இரண்டு தோரை உயரம் உடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது

ருத்ராக்ஷத் தாழ்வடம் ஒன்றில் பொன்னின் சுரி 56-ம் ருத்ராக்ஷம் 56-ம் உள்பட நிறை 8-கழஞ்சே 9– மஞ்சாடி[4] ; விலை காசு 25.

குறுவானியக் குடியாகிய[5] பரகேசரிபுரத்து நகரத்தார். கொடுத்தது


  1. S. I. I. Vol. II Part II No. 38 & 41
  2. தோரை - நெல்; (8 தோரை- 1 விரல்; 12 விரல்- 1 சாண்; 2 சாண் - 1 முழம்.)
  3. Solid image (உள் இடைவெளி இல்லாதது).
  4. 2 குன்றி - 1 மஞ்சாடி, 20 மஞ்சாடி - 1 கழஞ்சு.
  5. இது இராசேந்திர சிங்க வளநாட்டில் இருந்த ஊர்; தஞ்சை ராசராசேச்சுரத்துத் தேவதானங்களுள் ஒன்று.