பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


பரகேசரிபுரத்து நகரத்தார் கொடுத்தது

திருகு ஒன்று உள்பட பட்டைக்காறை ஒன்று, பொன் முக்காலே குன்றி.

வெண்ணி நகரத்தார் கொடுத்தன

திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே 2மஞ்சாடியும் குன்றி; திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே 2 மஞ்சாடி.

3. திருநாவுக்கரசர் பிரதிமம்

பாதாதி கேசாந்தம் 22 விரலே 2 தோரை உயரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவிக்கப் பெற்றது; இவர் எழுந்தருளி நின்ற பத்மம் இரு விரலே ஆறு தோரை உயரமுடையது; இதனோடுங்கூடச் செய்த பீடம் எண்விரலே ஆறு தோரைச் சம சதுரத்து நால்விரல் உயரமுடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்று உள்பட நிறை ஆறு மஞ்சாடியும் இரண்டு மா; விலை காசு ஒன்று. ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்று உள்பட நிறை ஆறு மஞ்சாடியும் இரண்டுமா, விலை காசு ஒன்று. கண்டிகை ருத்ராக்ஷம் ஒன்றும் சுரி ஒன்றும் நிறை ஐங்கழஞ்சே மஞ்சாடியும் குன்றி: விலை காசு எட்டு. திருப்பொற்பூ ஒன்று, பொன் கழஞ்சே 4 மஞ்சாடியும் குன்றி; திருக்கைக்காறை ஒன்று, பொன் இரு கழஞ்சு; திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடி.