பக்கம்:சோழர் வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

சோழர் வரலாறு



ரேனாண்டு-சோழர்: கடப்பை-கர்நூல் கோட்டங்களைத் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் ஆண்டிருந்த நான்கு அரசர்கள் பெயர்களைக் கொண்ட பட்டயமும் சில கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவர் தம்மை 'ரேனாண்டுச் சோழர்' என்றும் 'கரிகாலன் மரபினர்’ என்றும் கூறிக்கொண்டனர். அவர்கள் ஆண்ட பகுதியில் ஏழாயிரம் சிற்றூர்கள்[குறிப்பு 1] இருந்தன. அவர்கள் நாட்டைக் கி.பி. 639-640-இல் பார்வையிட்ட ஹியூன்-ஸங் தன் குறிப்புப் புத்தகத்தில், தான் சோழ நாட்டைப் பார்த்ததாகக் குறித்துள்ளான்[1]. அவர்கள் எந்தக் காலத்தில் அந்த வடபகுதிக்குச் சென்றனர் - கரிகாலன் காலத்திலா? அல்லது சிம்ம விஷ்ணு சோணாட்டைக் கைப்பற்றிச் சோழ மரபினரைத் தன் வடபகுதி நாட்டைத் தனக்கடங்கி நடக்க ஆளனுப்பினானா?- என்பன விளங்கவில்லை. அவர்களை வென்றதாகப் புலிகேசி கூறுவதால், அச்சோழர் பல்லவர்க்கு அடங்கி - ஆனால் தம் உரிமையோடு ஆண்டவராவர் எனக் கோடலே பொருத்தமாகும். அந்தச் சோழர் இலச்சினை சிங்கம் ஆகும். அவர் பரம்பரை இதுவாகும்.[2]

                                 நந்திவர்மன்
                                      │
             ┌────────────────────────┼─────────────────────────┐
             │                        │                         │
       சிம்மவிஷ்ணு        சுந்தரானந்தன்             தனஞ்சயவர்மன் 
                                                        சோழமகாராசன் 
                                              மகேந்திர விக்கிரமவர்மன் 
  (முதித சிலாகூடிரன்,         நவராமன்,       சேர-சோழ-பாண்டியர்
                                                        │தலைவன்)
              ┌─────────────────────────────────────────┴──────────┐
              │                                                    │
         குணமுதிதன்                        புண்யகுமாரன், போர்முகராமன்,
                                               மார்தவசித்தன், மதனவிலாசன், 
                                                   பிருதிவி வல்லவன் முதலிய
                                                        பெயர்கள் உடையவன்.

  1. கிராமங்கள் என்பர் சிலர், 'மக்கள்' என்பர் சிலர்.
  1. Watters, 2, pp. 225 and 341.
  2. Ep, Ind. Vol. 11 p.345.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/156&oldid=1459214" இலிருந்து மீள்விக்கப்பட்டது