154
சோழர் வரலாறு
ரேனாண்டு-சோழர்: கடப்பை-கர்நூல் கோட்டங்களைத் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் ஆண்டிருந்த நான்கு அரசர்கள் பெயர்களைக் கொண்ட பட்டயமும் சில கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவர் தம்மை 'ரேனாண்டுச் சோழர்' என்றும் 'கரிகாலன் மரபினர்’ என்றும் கூறிக்கொண்டனர். அவர்கள் ஆண்ட பகுதியில் ஏழாயிரம் சிற்றூர்கள்[குறிப்பு 1] இருந்தன. அவர்கள் நாட்டைக் கி.பி. 639-640-இல் பார்வையிட்ட ஹியூன்-ஸங் தன் குறிப்புப் புத்தகத்தில், தான் சோழ நாட்டைப் பார்த்ததாகக் குறித்துள்ளான்[1]. அவர்கள் எந்தக் காலத்தில் அந்த வடபகுதிக்குச் சென்றனர் - கரிகாலன் காலத்திலா? அல்லது சிம்ம விஷ்ணு சோணாட்டைக் கைப்பற்றிச் சோழ மரபினரைத் தன் வடபகுதி நாட்டைத் தனக்கடங்கி நடக்க ஆளனுப்பினானா?- என்பன விளங்கவில்லை. அவர்களை வென்றதாகப் புலிகேசி கூறுவதால், அச்சோழர் பல்லவர்க்கு அடங்கி - ஆனால் தம் உரிமையோடு ஆண்டவராவர் எனக் கோடலே பொருத்தமாகும். அந்தச் சோழர் இலச்சினை சிங்கம் ஆகும். அவர் பரம்பரை இதுவாகும்.[2]
நந்திவர்மன் │ ┌────────────────────────┼─────────────────────────┐ │ │ │ சிம்மவிஷ்ணு சுந்தரானந்தன் தனஞ்சயவர்மன் சோழமகாராசன் மகேந்திர விக்கிரமவர்மன் (முதித சிலாகூடிரன், நவராமன், சேர-சோழ-பாண்டியர் │தலைவன்) ┌─────────────────────────────────────────┴──────────┐ │ │ குணமுதிதன் புண்யகுமாரன், போர்முகராமன், மார்தவசித்தன், மதனவிலாசன், பிருதிவி வல்லவன் முதலிய பெயர்கள் உடையவன்.
- ↑ கிராமங்கள் என்பர் சிலர், 'மக்கள்' என்பர் சிலர்.